உதகையில் அரசு மருத்துவக் கல்லூரிக்காக 1838 அயல்நாட்டு மரங்களை வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உதகமண்டலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமையவுள்ள 25 ஏக்கரில் மண் சார்ந்த மரங்கள் ஏதும் இல்லை. மேலும் அங்கு வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக வாழப்பாடியில் மரங்கள் நடப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, உதகை அரசு மருத்துவமனை அமையவுள்ள வனப்பகுதியில் 1,838 மரங்கள் வெட்ட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் விஞ்ஞான முறையில் மரங்கள் வெட்டப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.