tamilnadu

img

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு.... 

சென்னை 
நாட்டின் புதிய கொரோனா மையமாக அடியெடுத்து வைத்துள்ள தமிழகத்தில் கொரோனா பரவல் கணிக்க முடியாத அளவிற்கு மின்னல் வேகத்தில் உள்ளது. குறிப்பாக தலைநகர் மண்டலமான சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களும் கொரோனாவால் அதிக சேதாரத்தை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,156 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 22 ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் 18 பேர் பலியாகியுள்ள நிலையில், உயிரிழந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 604 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.