tamilnadu

img

சாலைகளில் ராணுவத்தை மட்டுமே காண்கிறேன்...

காஷ்மீரில் உள்ள குல் மார்க்கில் உள்ள ஓய்வு விடுதிகளில் அரிதாகவே சுற்றுலாப் பயணிகள் வந்து அதன் அழகை ரசிக்கின்றனர்.வரக்கூடிய நாட்களில் சுற்றுலாத் துறை மீண்டும் சூடுபிடிக்கும் என அங்கு சுற்றுலா தொழிலை சார்ந்துள்ளவர் கள் நம்புகின்றனர்.  கொல்கத்தாவிலிருந்து வந்த  சுற்றுலாப் பயணி சாரவ் கோஷ், குல்மார்கில் குதிரை சவாரி ஏற்றத்தை ரசித்துக் கொண்டிருந்தார்.

அற்புதமான மனிதர்கள்

“காஷ்மீருக்கு வருவதற்கு முன், காஷ்மீர் மக்கள் எங்களின் எதிரிகள் என்று நினைத்தோம். ஆனால் இங்கு நிலைமை வேறாக இருந்தது. எங்களுக்கு காஷ்மீர் குறித்து எதிர்மறையான பல எண்ணங்கள் இருந்தன. ஆனால் காஷ்மீரில் இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் சகோதர சகோ தரிகள் போல வாழ்கின்றனர். காஷ்மீர் மக்கள் அற்புதமான மனிதர்கள். இங்குள்ள மனிதர்களின் இயல்பை பார்த்து எங்களுக்கு மிகவும் திருப்தி ஏற்பட்டு விட்டது” என்கிறார் சாரவ். ஆனால் அலைபேசி மற்றும் இணைய வசதி இல்லாததால் சில பிரச்சனைகளை உருவாக்கியுள்ளது என்கிறார் அவர். “இங்கு போஸ்ட் பெய்ட் அலைபேசி சேவைகள்தான்  வேலை செய்கின்றன. எனவே தொலை தூரத்தில் உள்ள எங்கள் உறவினர்களிடம் எங்களால் பேச முடியவில்லை. கடந்த சில தினங்களில் நாங்கள் பல படங்களை எடுத்தோம். ஆனால் எங்கள் உறவினர்க ளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ அவற்றை அனுப்ப முடியவில்லை. கொல் கத்தாவில் உள்ள எங்கள் உறவினர் ஒருவர் காஷ்மீரில் எடுத்த புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டார். ஆனால் எங்களால் அனுப்ப முடியவில்லை,” என்கிறார்.  மற்றொரு பிரச்சனை காஷ்மீரில் உள்ள சந்தைகள் மூடப்பட்டுள்ளன என்கிறார். 

சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப் பட்ட பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தப் போவதாக அக்டோபர் 10ஆம் தேதி அரசு அறிவித்தது. சட்டப்பிரிவு 370வை ரத்து செய்வதற்கு முன் இங்குள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் அமர்நாத் யாத்ரிகர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற அரசுக் கேட்டுக் கொண்டது.

ரூ.10,000 கோடி இழப்பு

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதால், அங்கு சுற்றுலாத் துறை பலத்த அடி வாங்கி யுள்ளது. காஷ்மீர் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறை 15- 20 சதவீதம் வரை பங்களிக்கி றது. காஷ்மீர் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை 10,000 கோடி ரூபாய் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.அதன் தலைவர் ஷேக் ஆஷிக், இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளை கணக்கிடுவது எளிதான காரியம் இல்லை என்று பிடிஐயிடம் தெரிவித்துள்ளார். அப்துல் மஜீத், உள்ளூரில் குதிரை சவாரி தொழிலில் ஈடுபட்டிருப்பவர். அவர் கடந்த ஆறு நாட்களுக்கு முன் தனது வியா பாரத்தை மீண்டும் தொடங்கினார். ஆனால் போதுமான சுற்றுலாப் பயணிகள் அவருக்கு கிடைக்கவில்லை மற்றும் அவரின் வாழ்வா தாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவ தில்லை. குல்மார்க்கில் வெகு சில சுற்றுலாப் பயணிகளையே காண முடிகிறது. சரா சரியாக ஒவ்வொரு நாளும், குல்மார்கில் 20 - 50 சுற்றுலாப் பயணிகள் வருகை தரு கின்றனர். எங்களுக்கு கிடைக்கும் சிறிய தொகையை கொண்டு குடும்பம் நடத்துவது முடியாத காரியமாக உள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு முன் நாங்கள் ஒரு நாளைக்கு 700-1000 ரூபாய் வரைக்கூட சம்பாதிப்போம். சமீபத்தில் அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்த கட்டுப் பாட்டை தளர்த்தியபின் நாங்கள் எங்கள் தொழிலை மீண்டும் தொடங்கினோம்,” என்கிறார் மஜீத். மற்றொரு சுற்றுலாப் பயணியான சோனா, நான்கு மாதங்களுக்கு முன் தனது பயணச்சீட்டை முன்பதிவு செய்தி ருந்தார். அவர் மனதில் பெரும் அச்சம் இருந்தது மேலும் காஷ்மீர் மக்கள் மீது அவருக்கு கோபம் இருந்தது. நான்கு வரு டங்களுக்கு முன்பு தான் இங்கு வரும்போது இங்கு நிலைமை வேறாக இருந்ததாக அவர் கூறுகிறார்.

நாங்களும் பயத்துடன்தான்...

“இன்றைய காஷ்மீர் முற்றிலும் மாறாக உள்ளது. அந்த சமயத்தில் எங்களால் எங்கும் செல்ல முடிந்தது. நாங்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வந்தபோது எங்கு வேண்டுமானாலும் சென்றோம். காஷ்மீர் மக்கள் மிகுந்த பயத்துடனும், கோபத்து டனும் காணப்படுகின்றனர். அவர்களின் கோ பத்தை எங்களால் உணர முடிகிறது. நாங்களும் பயத்துடன்தான் இருக்கிறோம். ஆனால் உள்ளூர் மக்கள் எங்களை நன்றாக பார்த்து கொள்கின்றனர்,” என்கிறார் அவர். மேற்கு வங்கத்தை சேர்ந்த அப்துல் சதார், ஆறு மாதங்களுக்கு முன் திட்டமிட்ட தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்தார். ஆனால் அரசு சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்த சில கட்டுப்பாடு களை தளர்த்தியவுடன் தனது மனைவி யுடன் காஷ்மீருக்கு வருகை தந்துள்ளார். சதார் மற்றும் அவரின் மனைவிக்கு மதிய உணவு கிடைப்பதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

“தற்போதுவரை இங்கு அனைத்தும் சரியாகதான் உள்ளது. ஒரே ஒரு பிரச்சனை அனைத்து உணவு விடுதிகளும் மூடப் பட்டுள்ளதால் எங்களுக்கு மதிய உணவு கிடைப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.” என்கிறார் அவர். குல்மார்கில் உள்ள வெல்கம் என்ற விடுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் எந்த விருந்தினரும் வரவில்லை. அந்த விடுதி யின் மேலாளர் ஷாநவாஸ், “ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு பிறகு நாங்கள் எந்த சுற்றுலாப் பயணியையும் பார்க்கவில்லை. இன்று சில சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். சீக்கி ரம் நிறைய பேர் வருவார்கள் என்று நினைக் கிறேன். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்தால் அதை நம்பி வாழ்பவர்களின் வருமானம் அதிகரிக்கும். சுற்றுலாப் பயணி களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் பெரிதாக யாரும் வரவில்லை.” என்கிறார்.

மும்பையில் இருந்து வந்துள்ள ஆஷ்ரதா, தான் வந்ததிலிருந்து சாலை களில் ராணுவத்தை மட்டுமே காண்பதாக பிபிசியிடம் தெரிவிக்கிறார். இங்கு இயல்பு நிலை திரும்பவில்லை என்பதால் எனது நண்பர்கள் யாரும் வரவேண்டாம் என்று தான் நான் கூறுவேன் என்கிறார் அவர். குல்மார்க்கில் படகு சவாரிபகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொண்டலா என்று சொல்லப்படும் படகு சவாரிக்கு வெகு சில ஆட்களே வருகின்றனர். குல்மார்க் கொண்ட லாவின் நிர்வாக இயக்குநர், “இதை நாங்கள் திறந்த பிறகு சுற்றுலாப் பயணிகள் கொஞ்சம் கொஞ்சம் வருகின்றனர். காலம் செல்லச் செல்ல சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எண்ணுகிறேன். ஆனால் அதே சமயம் இங்கு தீபாவளி சமயம்தான் சீசன் சமயம்.” என்கிறார்.

சுற்றுலாவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப் பாட்டை தளர்த்தியபின் சுற்றுலாத்துறை மறு சீரமைக்கப்படும் என அரசாங்கம் தெரி வித்தது. பயணிகளை கவர  பல திட்டங்களை தொடங்கும் என்று காஷ்மீர் சுற்றுலாவின் இயக்குநர் நிசார் அகமது வானி பிபிசி யிடம் தெரிவித்தார். செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் பல்வேறு வழிகளில் நாங்கள் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள் ளோம். விமான நிலையத்திலும் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். காஷ்மீரில் நிலைமை இன்னும் சரியாகவில்லை. ஆனால் காலம் போகப் போக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். விடுதி உரிமையாளர்கள், சுற்றுலா மற்றும் பயண ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து நாங்கள் பணிபுரிந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்போம்,” என்றார்.

பிபிசி இந்தி செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் எழுதிய செய்திக் கட்டுரையின் பகுதிகள்


 

;