உத்திரபிரதேசத்தில் தொலை செய்ய ரூ.55000 ஆயிரம் என ரவுடி கும்பல் அறிவித்துள்ளது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான யோகி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், கடத்தல் என குற்றச்சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூலை வரை 2024 கொலைகளும் இதே காலகட்டத்தில் 2020ல் 2032 கொலைகளும் நடந்துள்ளன என மாநில அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று குற்றம் செய்வதற்கான விலை பட்டியலை போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.
அதில் ஆட்களை மிரட்ட ரூ.1000, அடிக்க ரூ.5000, காயப்படுத்த ரூ.10000 கொலை செய்ய ரூ.55000 வசூலிக்கப்படும் என விலைப்பட்டியலுடன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி நம்பரும், இளைஞர் ஒருவர் கருப்பு உடையில் துப்பாக்கி வைத்திருப்பதும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அந்த போஸ்டரில் இடம்பெற்ற நபர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து உபி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.