tamilnadu

img

சவுகிதார் கையில் ‘ராஜினாமா’ கடிதம் கொடுத்த பாஜக எம்.பி.

உத்தரப்பிரதேசத்தில் ஹர்தோய் தொகுதிபாஜக எம்.பி.யாக இருந்தவர் அன் சுல்வர்மா. இவர் தற்போது, பாஜகவிலிருந்துவிலகி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். முன்னதாக தனது ராஜினாமா கடிதத்தைக்கொடுப்பதற்காக, பாஜக அலுவலகத்திற்குச்சென்ற அன்சுல் வர்மா, மோடி விரும்பும் ‘சவுகிதார்’ கையில் ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பது தான் சரி என்று கருதி, அங்கிருந்த செக்யூரிட்டியிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.“பாசி சமுதாய மாநாட்டின்போது, கோயில் வளாகத்துக்கு உள்ளேயே பாஜகவினர் மது விநியோகம் செய்தனர். அதனை நான் கண்டித்தேன். பாஜக தலைமையிடமும் எடுத்துரைத்தேன். அப்போதே என்னை ஒதுக்க பாஜகவினர் முடிவு செய்து விட்டார்கள். அதன் பின்னர், எல்லோரும் பெயருக்கு முன்னால் ‘சவுகிதார்’ என்று போட்டுக் கொண்டார்கள். ஆனால், நான் அவ்வாறு போடுவதற்கு மறுத்து விட்டேன். எனவே, இவற்றையெல்லாம் மனத்தில் வைத்து என்னை பாஜக தலைமை பழிவாங்கி விட்டது” என்று அன்சுல் வர்மா தெரிவித்துள்ளார். பாஜக எம்.பி. ஒருவர், கட்சி அலுவலகத்தின் செக்யூரிட்டியிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;