tamilnadu

img

பாபர் மசூதி இடிப்பு: குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுவித்தது நீதிமன்றம்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் லக்னோ சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. 

1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் தேதியன்று ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத், , பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட  சங்பரிவார் அமைப்புகள் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை நீதிமன்ற உத்தரவை மீறி இடித்தனர். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இது தேசம் முழுவதும் கடும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்திய வரலாற்றில் கருப்பு தினமாக வர்ணிக்கப்பட்டது. ஏற்கனவே அயோத்தி தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோத செயல். மதச்சார்பின்மை மீதான தாக்குதல் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது. 

உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ம்தேதி இடிக்கப்பட்டது. இது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் 48  மீது பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் 17 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த வழக்கில் 351 பெயரை சாட்சியங்களாக சிபிஐ ஆஜர்படுத்தியது. 600க்கும் அதிகமான ஆவணங்களை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருந்தது இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல் கே அத்வானி முரளி மனோகர் ஜோஷி உமாபாரதி உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் வினய் கட்டியார் சாவித்திரி ரிதம்பரா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயன்றது, மத வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்தியது,மத உணர்வுகளை புண்படுத்தும் படி நடந்து கொண்டது வன்முறையை தூண்டும் வகையில் உரையாற்றியது, சட்டவிரோதமாக கூடியது வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. லக்னோவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வழக்கில் வாக்குமூலத்தை பதிவு செய்ய காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நிறைவு செய்ய உச்ச நீதிமன்றம் மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கியது. இந்நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதியன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று நீதிபதி எஸ்.கே யாதவ் அறிவித்தார். தீர்ப்பு வழங்கும் சமயம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உயிரோடு இருப்பவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று  உத்தரவிட்டார்.இந்நிலையில் இந்த வழக்கில் 28 ஆண்டுகளுக்கு பின் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை என்று கூறி
குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.