tamilnadu

img

உத்தரபிரதேசம்: பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் பேருந்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தரப்பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத்திலிருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு 46 பயணிகளை ஏற்றியபடி ஒரு சொகுசு பேருந்து நேற்று இரவு புறப்பட்டுள்ளது. பேருந்து இரவு 9:30 மணிக்கு கன்னோஜ் மாவட்டத்தின் சிலோய் கிராமம் வழியாக சென்றபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் லாரியும் பேருந்தும் தீ பிடித்து எரியத்துவங்கியது. 
இதில் பயணிகள் சிலர் நெருப்பில் சிக்கினர். சிலர் பேருந்தில் இருந்து குதித்து தப்பியுள்ளனர்.  தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 40 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.  இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் உயிரிழந்தனர். மேலும்  21 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. 
பேருந்து விபத்தில் சிக்கிக் காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை விரைவாகவும் வழங்க உத்தரப்பிரதேச முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களும் 50,000 ரூபாயும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 
 

;