tamilnadu

img

78 வயதான புற்றுநோய் நோயாளி கோவிட் 19 தாக்குதலில் இருந்து மீண்டுள்ளார்

78 வயதான புற்றுநோய் நோயாளி கோவிட் - 19 தாக்குதலில் இருந்து மீண்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் லட்சக்காணக்கான மக்கள் இறந்துள்ளது. தொடர்ந்து இந்த நோயானது பரவி வருகிறது. இந்நிலையில், ஜார்கண்ட் தன்பாத் மாவட்டத்தில் வசிக்கும் 78 வயதான பரம்ஜித் கவுர், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். அம்மாநிலத்தில் கிழக்கு பகுதியில் தொற்றானது 250 நபர்களுக்கு ஏற்பட்டு குணமடைந்துள்ளனர்.

இருப்பினும், ஒரு புற்று நோயாளியாக இருந்து கொரோனா தொற்று பாதித்து குணமடைந்துள்ளார்.

பரம்ஜித் கவுர் மற்றும் அவரது 39 வயது மகன் மஞ்சித் சிங் ஆகியோர் தர்பாத்தில் உள்ள பிரத்யேக கோவிட் – 19 மருத்துவமனையில் இருந்து ஞாயிறன்று மாலை 23 நாட்கள் சிகிச்சையை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி புற்றுநோயை விட பயங்கரமானதாக இருந்தது, ஏனெனில் இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை என்று மருத்துவர்கள் உட்பட அனைவரும் கூறினர்," என்று பரம்ஜித் கவுர் கூறினார்.

புற்றுநோய் சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனைக்கு சென்ற பரம்ஜித் கவுருக்கு கொரோனா தோற்று இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊருக்கே வந்த பரம்ஜித் கவுர் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டார்.

தொடக்கத்தில் பரம்ஜித் கவுர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகி உள்ளது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு படிப்படியாக குணமாகியுள்ளார்.

ஜார்கண்டில் 610 பேர் கொரோன தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து பேர் இறந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை வரை, 256 கோவிட் -19 ல் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மற்றும் 349 பேர் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.