tamilnadu

img

நடைபாதையில் வழியும் கழிவு நீரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

உதகை, ஜூலை 26- உதகை பொன்மலை நிலையம் பகுதியில் உள்ள நடை பாதையில் வழியும் கழிவுநீரை சீரமைக்க அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியின் 4வது வார்டாக இருப்பது பொன் மலை நிலையம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக குடியிருப்புக்கு அருகே உள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு நடைப்பாதையில் வழிந்து ஓடுகிறது. இதனால் இந்த பகுதி முழுவ தும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகா தார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை களையும் இதுவரை எடுக்கவில்லை.  

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் வழியும் கழிவுநீரை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;