tamilnadu

img

நீலகிரியில் பருமழையின் தாக்கம் அதிகரிப்பு - பொதுமக்கள் அச்சம்

உதகை, ஆக 9 -  பருமழையின் தாக்கம் அதிகரிப்பால் நீலகிரியில் சாலைகள், வீடுகள்  அதிகளவில் பாதிப்புக்குள்ளானதால் அப்பகுதிப் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக பருவமழையின் தாக்கம் அதிகரித்துள் ளது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குன்னூர் டால்பின் நோஸ் செல்லும் சாலையில் மழை யின் காரணமாக பாறைகள் விழுந்து சாலை இரண்டாக உடைந்தது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, அப்பாதை முழுவதுமாக அடைக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.

இதேபோல், உதகை மெயின் பஜார் பகு தியில் ஹோட்டல் மானக் பின்புறம் பராம ரிப்பின்றி இருந்த கட்டிடம் ஒன்று கனமழை யின் காரணமாக சனியன்று திடீரென இடிந்து விழுந்தது. தற்போது இதன் சுவர்கள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ள தால் இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.