உதகை, ஜூன் 24- நீலகிரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜூன் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. உதகை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். உதகை வட்ட எரிவாயு நுகர்வோர் இதில் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விடுத்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.