tamilnadu

நவீன கொத்தடிமைகளா ஆஷா ஊழியர்கள்? உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்க சிஐடியு கோரிக்கை

உதகை, ஆக. 23 – குறைந்த ஊதியத்திற்கு அதிக ளவில் வேலை பெற்றுக்கொண்டு ஆஷா ஊழியர்களின் குறைகளைக் கண்டும் காணாமல் இருப்பதை சிஐ டியு வன்மையாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாவட்டத் தலைவர் கே.சுந்தரம், மாவட்டச் செயலாளர் ஆர்.ரமேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது,

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்த லூர் ஆகிய தாலுகா பகுதிகளில் 32 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 4 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களும் செயல்பட்டு வருகின் றன. கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு, ஆஷா ஊழியர்கள் என அழைக்கப்படும் கிராம சுகாதார தன் னார்வலர்களை நியமித்தது. அதன் படி தற்போது, நீலகிரி மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட ஆஷா ஊழியர்கள் பணிபுரிகின்ற னர். ஆரம்பத்தில் ஆயிரம் பேர் கொண்ட மக்கள் தொகைக்கு ஒரு ஆஷா ஊழியர் என நியமிக்கப்பட் டனர்.

இவர்களுக்கு பணி ஒதுக்கப் பட்ட கிராமங்களில் உள்ள கர்ப்பி ணிப் பெண்களைக் கணக்கெடுப் பது, பதிவு செய்வது மற்றும் இவர்க ளுக்கு முதன்மை சுகாதார உதவி கள் செய்வது, குழந்தை பெற்ற பின்பு சரியான முறையில் தடுப்பூசி போடு வது, குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை இவர்களின் பிரதான பணியாகும்.

மேலும், வளரிளம் பெண் களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கி ‌வளர்ச்சியை கண்காணிப் பது, சானிடரி நாப்கின் வழங்கு வதுடன் மாதவிடாய் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்துவது, பிறப்பு, இறப்பு குறித்து பதிவு செய்வது போன்ற பணிகளையும் செய்து  வருகின்றனர். நடைபாதை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமற்ற அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந் திருக்கும் கிராமங்களுக்கும் இவ்வூ ழியர்கள் நடந்தே சென்று சேவை புரி வதோடு பல நேரங்களில் வன விலங்குகளின் தாக்குதலுக்கும் ஆளாகின்றனர்.

108 ஆம்புலன்ஸ் எளிதில் வந்து செல்ல முடியாத நிலையில், இக்கிராமங்களில் உள்ள நோயாளிகள் மற்றும் கர்ப் பிணிப் பெண்களை உரிய காலத் தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பெரும் முயற்சி மேற் கொள்கின்றனர்.  இந்நிலையில், நீலகிரி மாவட் டத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமானது தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை களை துரிதப்படுத்தி உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இத்தடுப்புப் போரிலும் ஆஷா ஊழியர்கள் முன் னின்று பணிபுரிகின்றனர்.

இந்நி லையில், வெளி ஊர்களுக்குச் சென்று திரும்பும் உள்ளூர்வாசிகள் 7 நாட்கள் தங்கள் வீடுகளில் தனி மைப்படுத்திக் கொள்ள அறிவுறுத் தப் படுகின்றனர். அதனடிப்படை யில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்பதைக் குறிக்கும் வகையில் கதவில் நோட்டீஸ் ஒட்டப்படுகி றது. அவ்வாறு நோட்டீஸ் ஒட்டிய ஆஷா ஊழியரின் வீடுகளுக்குச் சென்று ஆபாச வார்த்தைகளால் சில நபர்கள் மோசமாக பேசி வருகிறார் கள்.

சமீபத்தில் இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டதால், இதுகுறித்து சம்பந்த பட்ட நபர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஷா ஊழியர் ஒருவர் காவல்நிலை யத்தில் புகார்  அளித்தார். ஆனால் போலீசார் புகாரைப் பதிவு செய்து  முதல் தகவல் அறிக்கை வழங்குவ தற்கு மாறாக புகார் அளித்த ஊழி யரின் வீட்டுக்கே சென்று புகாரை திரும்பப்பெறச் சொல்லி அச்சுறுத்தி வருகிறார்கள். இது ஆஷா ஊழியர்க ளைக் கொதிப்படையச் செய்துள் ளது.

ஆகவே, இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், தற்போதுள்ள சூழலில் கிராம சுகாதாரம் மேம்பட பணிபு ரிந்து வரும் ஆஷா ஊழியர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமும், பணி நிரந்தரம், பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள் ளது.