உதகை, ஆக. 11 - குந்தா அரசு துவக்கப்பள்ளி கட்டிட பணிகளை விரைந்து முடித்திட நிதி ஒதுக்கிட வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட குழு உறுப்பினர் கே.சுந் தரம், உதகை தாலுகா செயலாளர் எல்.சங்கரலிங்கம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட்டம், குந்தா பகுதி யில் அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாண விகள் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவர். இந்நிலையில், இப்பள்ளியில் போதிய வகுப்பறை வசதி இல்லாத தால் புதிய வகுப்பறைகள் கட்டுவ தற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு அதற்கான பணிகளும் துவக்கப் பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம் பாட்டு நிதி திடீரென நிறுத்தப்படுவ தாக வந்த அறிவிப்பை தொடர்ந்து, நடைபெற்ற கட்டிடப் பணிகள் பாதி யிலேயே நிறுத்தப்பட்டன. எனவே, இந்த கொரோனா பொதுமுடக்கத்தை பயன்படுத்தி அரசு துவக்கப்பள்ளி யில் பயிலும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடு கள் மூலம் நிதியினை ஒதுக்கீடு செய்து கட்டிட பணிகளை துவங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுகொள்வதாக அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.