உடுமலை, ஜுலை 22- உடுமலை அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு புத னன்று நடைபெற இருக்கிறது. உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியில் 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்டக் கலந்தாய்வு கடந்த ஜுலை 8 ஆம் தேதியன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் முதுநிலை பட்ட வகுப்புகளில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கி யம், கணிதம், பொருளியல், வணிகவியல், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், சுற்றுலாவி யல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒரு சில இடங்கள் காலி யாக உள்ளன. ஆகவே, இந்த இடங்களை நிரப்பிடும் வகையில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜுலை 24 ஆம் தேதியன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் கல்லூரி வளா கத்தில் நடைபெற உள்ளது. முதல் கட்டக் கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவர்கள், கலந்து கொண்டு இடம் கிடைக்காதவர்கள் இந்த இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி பொறுப்பு முதல்வர் பேரா.ச.பொன்முடி தெரிவித்துள்ளார்.