tamilnadu

img

அமராவதி அணை நீர் மட்டம் உயர்வு

உடுமலை, ஆக. 8- அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணையின் மொத்த உயரம் 60 அடி ஆகும். இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி யில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை  பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து  படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 463 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து புதனன்று காலை வினாடிக்கு 1101 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 45அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசன விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

;