tamilnadu

img

குடும்பச் சொத்தில் சம பங்கு பெண்ணுக்கும் உரிமை உண்டு

உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

புதுதில்லி, ஆக. 11 - இந்து வாரிசுரிமைச்  சட்டத்தின் 2005ஆம் ஆண்டு திருத்தத்திற்கு முன்பு பிறந்திருந்தா லும் கூட அந்த பெண்களுக்கு, பாகம் பிரிக்கப் படாத இந்து குடும்பங்களின் சொத்துக்களில் சம  உரிமை உண்டு என உச்சநீதிமன்றம், செவ்வா யன்று மிக முக்கியத் தீர்ப்பினைவழங்கியுள்ளது. இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956, 2005ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. இத்திருத்தம் செய்யப்பட்ட காலத்திற்கு முன்பே இறந்திருந்தா லும் கூட அந்தப் பெண்களின் வாரிசுகளுக்கும் 2005 திருத்தச்சட்டத்தின்படி, பாகம் பிரிக்கப் படாத இந்து குடும்பங்களின் சொத்துக்களில் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசியல் கட்சிகளும் சட்ட வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் 2005ஆம் ஆண்டு திருத்தமானது, இத்திருத்தத்திற்கு முன்பே பிறந்திருந்தாலும், அந்த சமயத்தில் உயிரோடு இருந்த பெண்கள் அனைவரது சொத்துரிமையையும் உறுதி செய்கிறது என உச்சநீதிமன்றம் மிக முக்கிய விளக்கத்தினை அளித்திருக்கிறது.

தில்லி உயர்நீதிமன்றத்திற்கு சொத்துரிமை தொடர்பாக மூன்று வழக்குகள் வந்திருந்தன. பிரகாஷ் எதிர் பூலாவதி, தானம்மா எதிர் அமர் மற்றும் மங்கம்மாள் எதிர் டி.பி.ராஜு ஆகிய இந்த வழக்குகளில்  ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அளித்துள்ள வழிகாட்டுதலில் முரண்பாடு இருப்பதாகக் கூறி மீண்டும் மேல்முறையீடு செய்யுமாறு தீர்ப்பளித்தது. அந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த  உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமை யிலான அமர்வு, 2018 நவம்பரில், இந்த வழக்கு கள் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தது. அந்த அடிப்படையில் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நஸீர், எம்.ஆர். ஷா  ஆகியோர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, செவ்வாயன்று தீர்ப்பு வழங்கியது. இம்மூன்று வழக்குகளிலும் அடிப்படையான பிரச்சனை, இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் 2005 ஆம் ஆண்டு திருத்தமானது, முன்தேதியிட்டு பெண்களுக்கான சம உரிமையை உறுதி செய்யும் விதத்தில் பொருந்துமா என்பதுதான் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் மேற்கண்ட சட்டத்திருத்தமானது முன்தேதியிட்டு, அத்திருத்தத்தின்போது உயிரோடு இருந்த பெண்கள், தற்போது உயிரோடு இல்லை என்ற போதிலும் அவர்களுக்கும் பொருந்தும் என்று தீர்ப்பளித்தனர்.

இந்த அமர்வின் தலைவரான நீதிபதி அருண் மிஸ்ரா தீர்ப்புரையை வாசிக்கும்போது, மகன்களுக்கும் மகள்களுக்கும் சொத்துக்களில் சம உரிமை உண்டு என்பதை நீதிமன்றம் உறுதி செய்கிறது என அறிவித்தார். “குடும்பச் சொத்தில் மகனுக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ அதே அளவிற்கான சம பங்கு மகளுக்கும் அளிக்கப்பட வேண்டும்” என்று அவர் தமது தீர்ப்பில் கூறினார். இந்து வாரிசுரிமை (திருத்த) சட்டம், 2005 -ன் படி, குடும்பச் சொத்துக்களில் ஆணுக்கு பிறப்பிலேயே சொந்த உரிமை உண்டு என்பதைப் போல பெண்ணுக்கும் பிறப்பிலேயே அந்த உரிமை உறுதி செய்யப்படுகிறதா என்ற கேள்வியே, மேற்கண்ட முறையீடு வழக்குகளின் மூலம் உச்சநீதிமன்றத்தின் முன்பு எழுப்பப் பட்டிருந்தது. அதாவது, இத்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே பிறந்திருந்தால் அந்தப் பெண், குடும்பச் சொத்தில் சம உரிமை  உள்ளவராக கருதப்படுவாரா என்பதே கேள்வி யாகும். இதை தெளிவுபடுத்தியுள்ள உச்சநீதி மன்றம், குடும்பச் சொத்தில் பிறப்பிலேயே ஆணுக்கு எந்த அளவு உரிமை உள்ளதோ அதே சம அளவு பெண்ணுக்கும் உள்ளது என்றும், ஒரு பெண்ணின் தந்தை இந்த சட்டத்திருத்தத்திற்கு முன்பே இறந்திருந்தாலும் கூட அந்த சொத்தில் அந்தப் பெண்ணுக்கு சம உரிமை உண்டு என்றும் உறுதிசெய்துள்ளது.