tamilnadu

img

ஏன் துரிதமாக செயல்படவில்லை?

தில்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் கேள்விக்கணைகள்

புதுதில்லி, பிப். 26 - தில்லி வன்முறையை தில்லி போலீசார் கையாண்ட விதம் குறித்து உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. தில்லி வன்முறையை துரிதமாக கையாண்டிருக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தெரிவித்துள்ளார். தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத் துக்கு எதிராக ஷாஹின்பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர் களை அப்புறப்படுத்துவது தொடர்பான விசார ணையின்போது நீதிபதி இதனைதெரிவித்தார். மேலும் ‘உடனடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது போன்ற சூழல்களில் இங்கி லாந்து போலீசார் நடவடிக்கைகள் எடுப்பதை பாருங்கள்’ என்று நீதிபதி கே.எம்.ஜோசப் சுட்டிக்காட்டினார். “வன்முறையின் போது உடனடி நட வடிக்கை எடுக்காமல், எதற்காக காத்திருக்க வேண்டும்’’ என்றும் உச்சநீதிமன்றம் அமர்வு வினவியது. மேலும், மனித உயிர்கள் விலைமதிப்பற்றது என்றும், நிர்வாகத்தை அதன் பணியை செய்யவிடுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம்.

ஏன் இந்த அளவிற்கு நிலைமையை கைமீறிப் போக விட்டீர்கள் என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற அமர்வு, ‘’இது மிக வும் முக்கியமான பிரச்சனை. எவ்வளவு உயிர் களை இழந்துள்ளோம். 13 தானா அல்லது அதற்கும் மேலா?’’ என்று வினவியது. ஆனால் அதன்பின்னர் பலி 21 ஆகிவிட்டது. இதனிடையே ஷாஹின்பாக் தொடர்பான விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம் கூறியது.

தில்லி உயர்நீதிமன்றம் ஆவேசம்

முன்னதாக தில்லியில் நிலைமைகள் மிகவும் மோசமாகச் சென்று கொண்டி ருப்பதை, உணர்த்த தில்லி உயர்நீதிமன்றம், அதிகாலை 1.42 மணியளவில் அவசரமாகக் கூடி, முஸ்தபாபாத்தில் வன்முறையில் பாதிப்புக்கு உள்ளான 20 பேரை உரிய பாது காப்புடன் உடனடியாக குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திட வேண்டும் என்று கட்டளையிட்டது. நீதியரசர் முரளிதர் இல்லத்தில் நீதியர சர்கள் எஸ்.முரளிதர் மற்றும் ஏ.ஜே. பம்பானி ஆகியோரடங்கிய அமர்வாயம், அசாதாரண மான சூழ்நிலையில் நடைபெற்ற விசாரணை யில் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:

இது ஒரு சிறப்பு அமர்வாகும். உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தில்லியில் இல்லாத தால், அடுத்த மூத்த நீதிபதி ஜி.எஸ்.சிஸ்டானி  உத்தரவுக்கு இணங்க 26.2.2020 அதிகாலை 12.30 மக்கு இந்த சிறப்பு அமர்வு நடைபெற் றது. எங்களில் ஒருவர் (நீதியரசர் எஸ்.முரளி தர்) வழக்குரைஞர் சுரூர் மாண்டர் என்பவரிட மிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்றினைப் பெற்றார். அந்த அழைப்பானது, மிகவும் கொடூரமான சூழ்நிலைகளை விளக்கியது டன், வட கிழக்கு தில்லியில் கலவரம் நடந்த  பகுதிகளில் மிகவும் கொடுங் காயங்கள் அடைந் துள்ள நபர்கள் புது ஏ1 ஹிந்த் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டதாகவும், ஆனால் அது மிக வும் சிறிய மருத்துவமனையானதாலும் அங்கே  கொடுங்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகள் இல்லாததாலும், தில்சாத் கார்டனில் உள்ள குருதேஜ் பகதூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அவர்களை பாதுகாப்பாக அங்கே அனுப்பிவைத்திட ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் கோரினார்.

முன்னதாக செவ்வாய்க் கிழமையன்று மாலை,  காயம் அடைந்தவர்களை  மருத்துவமனைக்குக் கொண்டுவருவதில் காவல்துறையினர் ஆதரவினைப் பெறுவதில் தோல்வி  அடைந்துவிட்டபின்னர், மருத்துவ மனை அதிகாரிகள் தங்கள் இக்கட்டான மற்றும் சங்கடமான நிலையினை சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர். நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டி ருந்த சமயத்தில், நீதிபதிகள் தில்லி காவல்துறை சார்பான வழக்குரைஞர் சஞ்சய் கோஷ் மற்றும் இரண்டு மூத்த காவல்துறை  அதிகாரிகளுடனும் மற்றும் ஏ1 ஹிந்த் மருத்துவ மனை டாக்டர் அன்வர் ஆகியோருடனும் ‘ஸ்பீக்கர் போன்’ மூலமாகப் பேசினார்கள். டாக்டர் அன்வர் நீதிபதிகளிடம், ஏ1 ஹிந்த் மருத்துவமனையில் இறந்த நிலையில் இருவரும், காயம் அடைந்த நிலையில் 22 பேரும் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் குருதேஜ் பகதூர் மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக, அன்று மாலை 4மணி யிலிருந்தே காவல்துறையினரின் உதவி யைக் கோருவதற்கு முயன்றுகொண்டி ருந்ததாகவும், எனினும் வெற்றி பெறமுடிய வில்லை என்றும் கூறியதை நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்கள். 

பின்னர் நீதிமன்றத்தில், நீதிபதிகளின் முன்பாகவே, மூத்த காவல்துறை அதிகாரி களில் ஒருவரான காவல்துறை துணை ஆணை யர்(குற்றப்பிரிவு), ராஜேஷ் தியோ, காவல் துறை துணை ஆணையர் (கிழக்கு) தீபக்  குப்தாவிடம் பேசி, உடனடியாக மருத்துவ மனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

இந்தக் கட்டத்தில் நீதிமன்றத்தின் பிர தானக் கவலை, காயமடைந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும், அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு ஏற்பாடு செய்வதும் அதற்காக காயமடைந்தவர்களை பக்கத்தில் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு டன் அனுப்பி வைப்பதாகும். இந்த விதத்தில் நீதிமன்றம், தில்லி காவல்துறையினருக்கு பாதுகாப்புடன் காயமடைந்தவர்களை குரு தேஜ் பகதூர் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்; அங்கே காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதி இல்லை யெனில் அவர்கள் எல்என்ஜேபி மருத்துவ மனை அல்லது மௌலானா ஆசாத் அல்லது வேறு ஏதேனும் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.”

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருக்கின்றனர்.

நீதியரசர் முரளிதர் தன் உத்தரவை டிக்டேட் செய்துகொண்டிருக்கையிலேயே, காவல்துறை துணை ஆணையர் (கிழக்கு) ஏ1 ஹிந்த் மருத்துவமனைக்குச் சென்று, காவல்துறையினர் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றதாகக் கூறி, நீதித்துறையின் கட்டளைகள் நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்தார்.

நீதிமன்றத்தில் அதிகாலையளவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மேலும், காவல்துறையினர் நீதிமன்றத்தின் உத்தரவு எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று அதிகாலை 2.15 மணிக்குள் கூற வேண்டும் என்றும், மேலும் இவற்றை காவல் துறை ஆணையரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.நீதியரசர் முரளிதர் தில்லி உயர்நீதி மன்றத்தில் மூன்றாவது மூத்த நீதிபதியா வார். எனினும் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதி மன்றத்திற்கு விரைவில் மாற்றப்பட இருக்கிறார்.

நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைக்காக உரிய மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு முயற்சி செய்து, அதில் தோல்வி கண்ட,  முற்போக்கு மருத்துவர்கள் மற்றும் அறிவிய லாளர்கள் அமைப்பு (Progressive Medicos and Scientists) மருத்துவர் டாக்டர் ஹர்ஜித் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்குக் கூட நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டிருப்பது ஜனநாயகத்தின் நகைமுரண்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.