tamilnadu

img

பாஜக-வினரை காப்பாற்ற உண்மையை மறைப்பதா? கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டனம்...

பெங்களூரு:
அரசியல் நிகழ்வுகளில் முகக்கவசம் அணிவதை வலியுறுத்தி, ‘லெட்ஸ்கிட் பவுண்டேஷன்’ என்ற  அமைப்பு கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது.

குறிப்பாக, செப்டம்பர் 30 அன்றுபெங்களூரு தெற்குத் தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவை வரவேற்க, விமான நிலையத்தில் திரண்ட கூட்டத்தில், கொரோனா தொடர்பான சமூக அறிவுரைகள் பின்பற்றப்படாததை, அந்த அமைப்பு மனுவில் சுட்டிக்காட்டி இருந்தது.இந்த அரசியல் நிகழ்வில், மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி உள்ளிட்டபாஜக-வினர் ஒருவரும் முகக்கவசம் அணியவில்லை; சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை என்பதற்கான புகைப்பட ஆதாரங்களையும், வழக்கறிஞர் ஜி.ஆர். மோகன் இணைத்திருந்தார்.இந்த மனுவை, தலைமை நீதிபதிஅபாய் ஓகா மற்றும் நீதிபதிவிஷ்வஜித் ஷெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, “முகக்கவசம் அணியாமல், விதிமுறைகளை மீறியதற்காக மக்களவை உறுப்பினர் மற்றும் இதர அரசியல் தலைவர்களிடம் மாநில அரசு அபராதம் வசூலித்ததா? அவர்கள் மீது எடுத்தநடவடிக்கை என்ன?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.மேலும், “அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம் மாநில அரசுமக்களுக்கு சொல்லும் செய்தி என்ன? அந்த நிகழ்வில் விதிமுறைமீறல் இருந்ததற்கான புகைப்பட ங்கள் இருந்தும், காவல்துறை தரப்பில் எதற்காக உண்மை மறைக்கப்படுகிறது?” என்றும் கேட்டுள்ளனர்.