புதுதில்லி,ஜூலை 18- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அனைத்தும் அதன் இணையதளத்தில் ஆங்கி லத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டு வந்தன. அந்தந்த மாநில மொழி களில் தீர்ப்புகளை பதி வேற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று, ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இருந்து தொடுக்கப்பட்ட 100 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள், ஜூலை 3 ஆம் தேதியன்று அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடப் பட்டன. ஆனால் அதில் தமிழ் மொழி இடம்பெற வில்லை. இது தமிழ் மக்கள், ஆர்வலர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழ்மொழியிலும் தீர்ப்பு கள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. தீர்ப்பு மொழி பெயர்ப்பில் பிழை இருந்தாலும், ஆங்கிலத்தில் வெளியான தீர்ப்பு மட்டுமே அதிகாரப் பூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது.