tamilnadu

img

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏபாப்டே பதவியேற்வு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று அடுத்த  தலைமை நீதிபதியாக  பாப்டே(63) பதவியேற்க்கொண்டார். 
மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், வழக்கறிஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர், நீதிபதி பாப்டே. இவருடைய தந்தை, அரவிந்த் ஸ்ரீநிவாஸ் பாப்டே,மூத்த வழக்கறிஞர். நாக்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்த, எஸ்.ஏ.பாப்டே, உச்ச நீதிமன்றத்தில், 21 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார். மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி, மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றினார், கடந்த  2013ல், உச்ச நீதிமன்ற நீதிபதியானார். அயோத்தி வழக்கு,  தனிமனித சுதந்திரம் உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளார். வரும், 2021 ஏப்., 23 வரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார்.
உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகோய், நேற்றுடன் ஓய்வு பெற்றதைத்தொடர்ந்து இன்று காலை குடியரசுத்தலைவைர் ராம்நாத்கோவிந்  எஸ்.ஏ பாப்டேவிக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார்.