tamilnadu

img

உயர்நீதிமன்ற உத்தரவின்படி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்க: சிபிஎம்

சென்னை, ஏப்.9- உயர்நீதிமன்ற உத்தரவின்படி விளைபொருட்களை விவசாயி களிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸின் கார ணமாக பிறப்பிக்கப்பட்ட ஊர டங்கு உத்தரவால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர, விவசாயிகள் மற் றும் விவசாயத் தொழிலாளர்கள் மிகப்பெரும் பொருளாதார சிக்க லில் தவித்து வருகின்றனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத் தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் பின்வரும் உத்தரவுகளைப் பிறப் பித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவின் காரண மாக விவசாயிகள் தங்களது விளை பொருட்களை அறுவடை செய்து சந்தைகளுக்கு அனுப்ப இயல வில்லை. முக்கியமாக விவசாயி களிடம் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் வராத காரணத்தால் அனைத்து விளைபொருட்களும் விளைநிலங்களிலே அழிந்து கொண் டுள்ளன. குறிப்பாக மா, பலா, வாழை, திராட்சை, கொய்யா, முருங்கை உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மலர்கள் வீணே அழிந்து  வருகின்றன. அதைப்போன்றே பல மாவட்டங்களில் விளைவித்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் களத்துமேட்டிலேயே தேங்கியி ருக்கும் நிலையில் உள்ளது. இந்த விவசாயிகளைக் காப்பாற்ற இடைத் தரகர்களை நம்பாமல் அரசே நேர டியாக விவசாய விளைபொருட் களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டு மென நீதிபதிகள் உத்தரவிட்டுள் ளனர்.

மேற்குறிப்பிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தையும் ஏப்ரல் 6 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக முதலமைச்சர் அவர் களுக்கு அனுப்பிய கடிதத்தில் கோரிக்கைகளாக வலியுறுத்தி யிருந்தோம் என்பது குறிப்பிடத்தக் கது. இதைப்போன்று, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப் படும் ஆயிரம் ரூபாய்  நிவாரணத் தொகை, அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களையும் குடும்ப அட்டை கள் இல்லாத புலம் பெயர் தொழி லாளர்களுக்கும் வழங்க வேண்டு மென உத்தரவிட்டுள்ளனர். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவுகளை செயல் படுத்தும் வகையில்  தமிழக முத லமைச்சர் அவசர ஆணைகளைப் பிறப்பித்து நிறைவேற்ற வேண்டு மெனக் கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே, அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட் டுமே நிவாரணத் தொகையும், உணவுப் பொருட்களும் வழங்கு வதாக தமிழக அரசு அறிவித்துள் ளது. இந்த உத்தரவினை தளர்த்தி அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் ஆயிரம் ரூபாய்  நிவா ரணத் தொகையையும், உணவுப் பொருட்களையும் வழங்க வேண் டும்.

மேலும், தற்போது கிடைக்கும் செய்திகளின் படி தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசு அறி விக்கப்பட்ட நிவாரணத் தொகை யும் உணவுப் பொருட்களும் முழு மையாக வழங்கப்படாத நிலை உள்ளது. சில இடங்களில் ஒரு பகுதியினருக்கு இந்தத் தொகை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இன் னொரு பகுதியினருக்கு அரிசி மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இன் னொரு பகுதியினருக்கு பருப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அநே கமாக சமையல் எண்ணெய் பெரும் பகுதி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. விசா ரித்ததில் போதிய இருப்பு இல்லை யென நியாய விலைக்கடை ஊழி யர்கள் தெரிவித்துள்ளனர். மிகுந்த நெருக்கடி உள்ள இந்த நேரத்தில் பகுதி பகுதியாக பொருட்களைப் பிரித்து வழங்குவது மக்களைக் காப்பாற்ற உதவாது.

மேலும், வழங்கப்படும் அரிசி மிகவும் தரம் குறைந்ததாக புளு த்துப்போன அரிசி வழங்கப்படுவ தாக பொது மக்கள் புகார் தெரி வித்துள்ளனர். இவைகளையெல் லாம் கணக்கில் கொண்டு தமிழக அரசு உடனடியாக இவ்விசயத்தில் தலையிட்டு அறிவிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் தர மானதாகவும், அனைவருக்கும் கிடைக்கும்படியாகவும் செய்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.