tamilnadu

img

தனியார் ஆய்வகங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது

உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுதில்லி, ஏப்.8-  கொரோனா நோய் பரிசோதனைக்கு தனியார் பரிசோதனைக் கூடங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பரிசோதனைக்காக செலவாகும் தொகை யை மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி யுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் பொது மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா வைரஸ் நோய் பரி சோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அஷோக் பூஷண், நாடு பேரிடரை சந்தித்திருக்கும் நிலையில், தனியார் பரிசோதனை மையங்கள், கொரோனா பரிசோத னைக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். 

மேலும், கொரோனா பரிசோதனைக்கு ஆகும் செலவை மத்திய அரசு திரும்பச் செலுத்துவது குறித்து நீதிபதி கருத்துக் கேட்டார்.அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசிடம் இது பற்றி விளக்கம் பெற்று பதில் அளிப்பதாகக் கூறினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த விசாரணையில், இந்தியா வில் தற்போது 118 பரிசோதனைக் கூடங்களில் நாள் ஒன்றுக்கு 15 ஆயி ரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகின்றன. 47 தனியார் பரி சோதனை மையங்களும் இந்த பணியில் தற்போது இணைந்திருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.