சென்னை, மார்ச் 25- தமிழகம் முழுவதும் நீதிமன்ற பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களின் பணிகளையும் நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற நிர்வாகக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்ற நிர்வாகக் குழுவின் உத்தரவு குறித்து தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மறு உத்தரவு வரும் வரை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் யாருக்கும் அனுமதி யில்லை, அதி முக்கியத்துவம் வாய்ந்த, அவசர வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டுமெனில் நீதிபதி அனுமதி பெற்றே தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக, நீதிமன்ற அலுவல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும், மாவட்ட முதன்மை நீதிபதிகளின் அனுமதி யோடு, மிக அவசர வழக்காக இருந்தால் மட்டும் கீழமை நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என கூறப் பட்டுள்ளது.