மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்திய மருத்துவக்கவுன்சில் என முத்தரப்பு குழு அமைத்து கலந்து அலோசித்து இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து மூன்று வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தமிழக அரசு நடப்பாண்டே 50 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மேல்முறையீடு செய்திருந்து. இந்த மனு தொடர்பாக மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.