tamilnadu

img

நாமக்கல்லில் புதிய அரசு சட்டக் கல்லூரி திறப்பு

நாமக்கல், ஆக.24- நாமக்கலில் புதிய சட்டக் கல்லூரி யை அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.  நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கலில் அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து நாமக் கல் - திருச்சி சாலையில் உள்ள டான்சி வளாகத்தில் தற்காலிக கட்டிடத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரியை அமைப்பதற்கான பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் டான்சி வளா கத்தில் அமைந்துள்ள புதிய சட்டக்கல் லுரியை, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.  தொடர்ந்து கலந்தாய்வில் இடம் ஒதுக்கீடு பெற்றுள்ள 12 மாணவர்க ளுக்கு சேர்க்கைக்கான சான்றிதழ்களை யும் அமைச்சர்கள் வழங்கினர்.  புதிய சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு 80 இடங்களும், 5 ஆண்டு சட்டப்படிப்புக்கு 80 இடங்களும் உரு வாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 160 இடங்களில் மாணவர் சேர்க்கைக் கான கலந்தாய்வு தற்போது நடை பெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் வகுப்புகள் தொடங்கப் படவுள்ளன.