tamilnadu

img

நீட் தேர்வு முறைகேடு: மாணவருக்கு ஜாமீன்

மதுரை, நவ. 1- நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் திருப்பத்தூர் மருத்துவ மாணவருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.  திருப்பத்தூரைச் சேர்ந்த (முகமது இர்பான்) மருத்துவ மாணவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தி ருந்தார். அதில், “நான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இளங்கலை மருத்துவம் பயின்று வந்த நிலையில், நீட் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையின் பெரும்பகுதி முடிவடைந்த நிலையில், நான் எந்தவித முறைகேட்டி லும் ஈடுபடவில்லை. விசாரணைக்கு ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறேன். எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  நீதிபதி, முகமது இர்பான் தந்தையின் ஜாமீன் மனுவையும் இங்கேயே தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார், மேலும் மதுரை சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் முன்பு தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் முகமது இர்பானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.