நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கட்டண முறைகேடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் 'சாட்டிலைட் கோர்ஸ்' எனும் பெயரில் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நாகர்கோவிலைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.