tamilnadu

img

சாத்தான்குளம் சம்பவம் பிரண்ட்ஸ் ஆப் போலீசிடம் விசாரிக்க முடிவு

சிபிசிஐடி ஐஜி சங்கர் தகவல்

தூத்துக்குடி,ஜூலை 3- சாத்தான்குளம் காவல்துறையினரால் தாக்கப்பட்டு வணிகர்கள் ஜெயராஜ், இவரது  மகன் பென்னிக்ஸ் கொல்லப்பட்ட  வழக்கில் தொடர்பாக பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்களையும் விசாரிக்க திட்ட மிட்டுள்ளோம் என்று சிபிசிஐடி ஐஜி சங்கர்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளியன்று  காலை ஐஜி சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் அழிக்கப்பட்ட சில சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. அதனை இன்று ஆய்வு செய்யவுள்ளோம். இந்த வழக்கு தொடர்பாக  பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்களையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. நியாயமான முறையில் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார். 
 

;