சென்னை,நவ.8- சிலைக்கடத்தல் வழக்குகளில் உச்சநீதி மன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு தமிழக டிஜிபியே பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள் ளது. முன்னதாக சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிடு வதாகவும், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாகவும் பொன் மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இது தொடர்பாக எந்த ரகசிய அறிக்கையும் தங்களி டம் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த வாதங்கள் தொடர்பான ஆதாரங்களை மனுவாக தாக்கல் செய்ய இரு தரப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.