tamilnadu

img

2020- ஆம் ஆண்டுக்கான உயர்நீதிமன்ற விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சென்னை,டிச.15 சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வருகிற 2020 ஆம் ஆண்டு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஜனவரி 1 ஆம் தேதியும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலும், தெலுங்கு புத்தாண்டுக்காக மார்ச் 25 ஆம் தேதியும், மகாவீர் ஜெயந்திக்காக ஏப்ரல் 6 ஆம்தேதியும், புனித வெள்ளிக்காக ஏப்ரல் 10 ஆம் தேதியும் விடுமுறை விடப்படு கிறது. தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி விடுமுறை விடப்படுகிறது. இதற்காக முதல் நாளான ஏப்ரல் 13 ஆம் தேதி திங்கட்கிழமையும் உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1 ஆம் தேதியும், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மே 25 ஆம் தேதியும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆகஸ்டு 11 ஆம் தேதி (செவ்வாய்க் கிழமையும்) அதற்கு முதல் நாள் ஆகஸ்டு 10 ஆம் தேதி திங்கட்கிழமையும் உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படு கிறது.

காந்திஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் தேதியும், விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளிலும், மிலாது நபிக்காக அக்டோபர் 30 ஆம் தேதியும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 12 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதியும் விடுமுறை விடப்படுகிறது. இதுதவிர குடியரசு தினம், பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, மொகரம், ஆயுத பூஜை, தீபாவளி ஆகியவைகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. மேலும் கோடை விடுமுறை மே 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும், தசரா பண்டிகை விடுமுறை அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், கிறிஸ்துமஸ் விடுமுறை டிசம்பர் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை யிலும் விடுமுறை விடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.