சென்னையில் குடியுரிமை திருத்த எதிராக போராடுபவர்களை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச்சட்டம் 2019க்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் தொடர்ந்து பெண்கள் சிஏஏக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கோவை, திருப்பூரிலும் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பூரில் சிஏஏக்கு எதிராக காவல்துறையினரின் அனுமதி பெறாமல் போராட்டம் நடைபெற்று வருவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக வழக்கறிஞர் கோபிநாத் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவல்துறையினரின் அனுமதியின் போராடுவோரை அப்புறப்படுத்த டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.