tamilnadu

img

கொரோனாவால் பலியானோர் உடலைத் தடுத்தால் 3 ஆண்டு சிறை

சென்னை, ஏப்.27- கொரோனாவால் உயிரிழப் போரின் உடலைகளை தகனம் செய்யவிடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டால் ஓராண்டு முதல் மூன்றாண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று, தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. கொரோனா நோயால் உயிரிழப்போரின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வதைத் தடுப்பது குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது, தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 பிரிவு-74ன்படி அபராதம் உட்பட மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயால் உயிரிழப்போரின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம், தகனம் செய்வதைத் தடுக்கும் செயலையும், தடுக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையாக தண்டனை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்தின்படி, அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயால் உயிரிழப்போரின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் , தகனம் செய்வதைத் தடுப்பதும், தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 பிரிவு-74ன்படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறை தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;