tamilnadu

img

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்துக்கு எதிராக வழக்கு

சென்னை, செப். 18- சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி  இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக வி.கே.தஹில் ரமணி கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.  இந்த நிலையில், தலைமை நீதிபதியை மேகாலய மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நிய மித்தும், மேகாலய மாநில உயர்  நீதிமன்றத்தின் தலைமை நீதி பதியான ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நிய மித்தும் உச்சநீதிமன்ற மூத்த நீதி பதிகள் குழு (கொலீஜியம்) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், மூத்த நீதிபதிகள் எஸ்.கே.பாப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய குழு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் சிறந்த நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது. இந்த  நிலையில் தனது பணி இட மாற்றத்தை மறுபரிசீலனை செய்யக் கோரி தலைமை நீதி பதி வி.கே.தஹில் ரமணி உச்ச நீதிமன்ற கொலீஜியத்திடம் கோரிக்கை வைத்தார். ஆனால்  அவரது கோரிக்கை நிராக ரிக்கப்பட்டது.  

இந்த நிலையில், பணியிட மாற்றத்துக்கு அதிருப்தி தெரி வித்த தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமணி, கடந்த செப். 6 பத வியை ராஜினாமா செய்து, அதற்  கான கடிதத்தை குடியரசுத் தலை வர் ராம்நாத் கோவிந்துக்கும் , அதன் நகலை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கும் அனுப்பி வைத்துள்ளார். தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமணி வரும் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்  துடன் ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் மனுத் தாக்கல் செய்துள்ளார். அப்போது கொலீஜியம் முடிவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தை அணுகாதது ஏன்?  எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி கள் மனு பட்டியலிடப்பட்டபின் விசாரிப்பதாக உறுதியளித்தனர்.