tamilnadu

img

அரசின் பணி மாறுதல்-சார்ஜ் மெமோ ரத்து

அரசு மருத்துவர்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை,பிப்.28- மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணை யான ஊதியம் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழ் நாட்டில் உள்ள அரசு மருத்து வர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோ பர் மாதம் 25 ஆம் தேதி முதல் ஐந்து நாட்  கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்டிருந்தனர். அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.  போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்து வர்களை பணிமாற்றம் செய்தும், சார்ஜ்  மெமோ வழங்கியும் மாநில அரசு பழிவாங்கி யது. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த  அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உள் ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றததில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசா ரித்த உயர்நீதமன்றம், ஒழுங்கு நடவடிக்  கைக்கு இடைக்காலத் தடை விதித்தி ருந்தது.  அரசு மருத்துவர்களின் பலகட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்ததையொட்டி வேறு வழியின்றி கடந்த அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வேலை நிறுத்தத்திற்கு தள்ளப்பட்டனர்.

ஒரு கட்டத்தில் மக்கள்நலன் கருதி  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட மருத்து வர்கள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்று வேலைக்கு திரும்பினர். ஆனால்  அரசு நிர்வாகம் போராட்டத்தை முன்னெ டுத்த நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கத்  தோடு இடமாற்றம் செய்தும் துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் வெள்ளியன்று(பிப்.28) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில், “அரசின் இடமாற்றம் உத்தரவை யும் குற்றச்சாட்டு குறிப்பாணையும் ரத்து செய்து” உத்தரவிட்டார். மருத்துவர்களுக்கு வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையில்லை. அவ்வாறு  வேலை நிறுத்தம் செய்ய அவசியம்  ஏற்படும் பட்சத்தில் அரசு அதனை தடுப்ப தற்கான முயற்சி எடுத்திருக்கவேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் தெரி வித்தார். ஆனால், வேலை நிறுத்தத்தை தடுக்க அரசு தவறி விட்டது என்றும் கூறி னார். மேலும், இடமாற்றம் உள்ளிட்ட நடவ டிக்கைகள் நிருவாக காரணங்களுக்காக அளிக்கப்பட்டது என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க மருத்த நீதிபதி, இது பழி வாங்கல் நடவடிக்கைதான் என்பதை ஏற்றுக்கொண்டார்.  வரும் காலங்களில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை தவிர்க்க  வேண்டும், என்றும் அதே சமயத்தில் அரசு  மருத்துவர்களின் கோரிக்கைகளை கேட்டு  தீர்வுகாண வேண்டும் என்றும் இருதரப் பிற்கும் அறிவுரை வழங்கினார். இந்த வழக்கில் மருத்துவர்கள் தரப்பில்  வழக்கறிஞர்கள் காரல் மார்க்ஸ், கனக ராஜ், ஜோதிமணி ஆகியோர் தனித்தனி யாக ஆஜராகினர்.