சென்னை, பிப். 19- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில ஆளுநர் நல்ல முடிவுக்கு எடுப்பார் என்று நம்புகிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். சட்டப்பேரவையில் புதனன்று (பிப்.17) நிநிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க் கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், “உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநரை வலியுறுத்த வேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசுக்கு உள்ளஅதிகாரத்தை பயன்படுத்திதான் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப் பப்பட்டுள்ளது. ஒரு பிரச்சனை மீது ஆளுநர் இத்தனை நாளுக்குள் முடிவெடுக்க வேண்டுமென்று அரசியலமைப்பு சட்டமோ, உச்ச நீதிமன்றமோ கூறவில்லை. உச்சநீதிமன்றம், ஆளுநர் அதிகாரத்தில் தலையிடவிரும்பவில்லை. அரசாங்கம் ஆளுநருடன் பேசி தகவல் தெரிவியுங்கள் என்றுதான் கூறியி ருக்கிறது. ஆளுநர் இதுகுறித்து நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிடுகையில்,“ ஆளுநர் முடிவெடுக்க காலதாமதம் செய்வது ஏன் என்று கேட்க அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால், ஆளுநரிடம் அரசு கேட்கலாம் என்றார். இதற்கும், பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், அவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தர வாக கூறவில்லை. அதிகாரப்பூர்வமற்ற முறையில் கேட்டு தெரிவிக்க கூறியுள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய துரைமுருகன், 28 வருடம் சிறையில் இருந்துவிட்டார்கள். மனிதாபிமானத்தோடு, செல்வாக்கை பயன்படுத்தி, ஆளுநரிடம் பேசி முதலமைச்சர் 7 பேரை விடு தலை செய்ய வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த முதல மைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால் தான் ஆளுநருக்கு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம். ஆளு நர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம் என்றார்.