tamilnadu

img

கடன் தவணை குறித்த ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

 புதுதில்லி:

கடன் தவணை குறித்த ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில், தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை ஒரு நாள் தாமதமாக்கினாலும் கூட அதை வாராக் கடன் என்று அறிவித்து 180 நாட்களுக்குள் தீர்க்குமாறு கூறியிருந்தது. மேலும், ரூ. 2 ஆயிரம் கோடிக்கு அதிகமான தொகைக்கு இந்த நடவடிக்கையை எடுக்குமாறும் கோடிட்டு காட்டியிருந்தது.

ரிசர்வ் வங்கியின் இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யகோரி பல நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தன. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய சுற்றறிக்கையை  ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை சட்டத்திற்கு எதிரானது என கருத்து தெரிவித்து உள்ளது.


;