வாஷிங்டன், ஜூலை 30- உலக அளவில் நடைபெற்ற போர் மற்றும் கலவரங்களால் 12 ஆயிரம் குழந்தைகள் பரிதாபமாக பலியாகி யுள்ளனர் என்று ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சி யாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் நடந்து வருகிறது. பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேல் அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஆப்கா னிஸ்தானில் தலிபான்களுக்கும், அர சுக்கும் இடையே கடந்த 18 வருடங்களாக போர் நிலவி வருகிறது. இத்தகைய நாடுகளில், கடந்த 2018 ஆம் ஆண்டு நடைப்பெற்ற போர் மற்றும் உள்நாட்டு கலவரங்களில் பலியான குழந்தைகள் பற்றி ஐ.நா. ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பலியான குழந்தை களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி யுள்ளது. இந்த கால கட்டத்தில் கடத்தல், கிளர்ச்சியாளர்களாக பயன்படுத்தப் படுதல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பள்ளிகள், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் என பல்வேறு வன்முறைகள் குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளன. இதில் ஆயுதம் ஏந்திய பயங்கர வாதிகளின் வன்முறைகள் எந்தவித மாற்ற மும் இல்லாமல் தொடர்ந்து இருந்து வரு கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.