tamilnadu

img

மீண்டும், மீண்டும் உலகம் கற்க வேண்டிய பாடம் - கணேஷ்

அமெரிக்கப் படைகள் வெளியேறக்கோரி இராக் தலைநகர் பாக்தாத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி.

உலகைச் சுற்றி

ஜனவரி 5 ஆம் தேதியன்று இராக் நாடாளு மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறது. இராக் மண்ணில் எந்தவொரு அந்நியப் படையும் இருக்கக்கூடாது என்று அது வலியுறுத்தியது. 2014 ஆம் ஆண்டில் ஐ.எஸ். என்று அழைக்கப் படும் தீவிரவாத அமைப்பை எதிர்த்துப் போராட உதவுமாறு சர்வதேச சமூகத்தை இராக் நாடாளு மன்றம் கேட்டுக் கொண்டது. இதை சாக்காக வைத்துக் கொண்டு இராக்கின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் உள்ளே புகுந்தன. கடந்த ஆறு ஆண்டுகளில் நிரந்தர படைத்தளங்களை அமைத்துக் கொண்டு அமெரிக்கப் படைகள் அங்கு தங்கி வருகின்றன. சினிமா கதாநாயகர்க ளைப் போன்று யாருக்கும் சொல்லாமல் இராக் படைத்தளங்களை அமெரிக்க ஜனாதிபதிகள் பார்வையிட்டனர். யாருக்கும் சொல்லாமல் என்றால், இராக் அரசுக்கும் சொல்லாமல்.

அறிக்கையல்ல, வெறும் காகிதம்

இராக் குறித்து ஆறு மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை ஒன்றை அமெரிக்க அரசோ அல்லது அதன் ஜனாதிபதியோ வெளியிட்டுக் கொள் வார்கள்.  விரைவில் அமெரிக்கப் படைகள் வெளி யேறும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், அது அறிக்கைக்கு மட்டுமே என்பது இராக் மக்களுக்குப் புரிய பல ஆண்டுகளாகி விட்டது. அமெரிக்காவின் கைப்பாவையாக இராக் அரசு இருந்தவரையில், வெளியேறுவதற்கான ஏற்பாடு கள் நடப்பது போன்று அந்த அரசும் நாடகமாடி வந்தது. ஆனால், தற்போதுள்ள அரசும், நாடாளு மன்ற உறுப்பினர்களும் அந்நிய ராணுவம் தங்கள் மண்ணில் இருக்கக்கூடாது என்ற முடிவை உறுதி யாக எடுத்திருக்கிறார்கள். இராக் மக்களும் அமெரிக்கா தலைமையிலான படைகள் வெளி யேற வேண்டும் என்று தொடர்ந்து கோரி வரு கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணிகள் நடந்துள்ளன.

இராக்கின் புதிய அரசுக்கு உதவ வந்த ஈரான் ராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கப் படை படுகொலை செய்கிறது. இராக் மண்ணில் நடந்த இந்தக் கொலைக்கு அந்நாட்டு அரசிடம் எந்தவித அனுமதியையும் அமெரிக்கப் படை வாங்கவில்லை. வாங்குவதற்கான எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மேற்கு ஆசியாவில் பெரும் கொந்தளிப்பை இந்தப் படுகொலை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் இந்தப் படுகொலையைக் கண்டித்து லட்சக் கணக்கானோர் கண்டனப் பேரணி நடத்தினர். ஜன நாயகக் கட்சி மட்டுமல்ல, டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கண்டனக்குரல் எழுப்பினார்கள். ஈரானின் பதிலடியோ உறுதியோடு வந்தது. இராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஏவுகணை வீசி ஈரான் பதிலடி கொடுத்தது. அப்படிப்பட்ட தாக்குதல் நடக்கவில்லை என்றும், தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்க ராணுவம் கூறியது. ஆனால் நாளாக ஆக, தாக்குதல் நடந்தது உண்மைதான் என்றும், ராணுவ வீரர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்றும் கொஞ்சம், கொஞ்சமாக உண்மையை அமெரிக்க நிர்வாகம் கக்கியது. அந்தத் தாக்குதலால் நூற்றுக் கும் மேற்பட்டவர்களுக்கு மூளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உயிரிழப்புகள் பற்றி இதுவரை யில் அமெரிக்க ராணுவம் சொல்ல மறுத்து வருகிறது.

அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு

ஈரான் மீது படையெடுக்க வேண்டுமானால், அமெரிக்க நாடாளுமன்றத்தைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது என்று அமெரிக்க செனட் அவை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக ஜனநாய கக் கட்சியினரோடு, சில குடியரசுக்கட்சி உறுப்பி னர்களும் சேர்ந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது ஜனாதிபதி டிரம்பைக் கட்டுப்படுத்துமா என்பது கேள்விக்குறி யாக உள்ளது. நடப்பாண்டில் அமெரிக்க ஜனாதி பதித் தேர்தல் உள்ள நிலையில், பதற்றத்தைக் கிளப்பி விட்டு மக்களின் வாக்குகளைப் பெறும் உத்தியை டிரம்ப் கையாளுவார் என்று எதிர்பார்க் கப்படுகிறது. சீனாவைத் தனிமைப்படுத்தும் உத்தி களையும் அமெரிக்கா கையில் எடுத்து வருகிறது. அண்மையில் ஐரோப்பிய நாடுகளிடம் அமெரிக்க அதிகாரிகள் இதுபற்றிப் பேசியிருக்கிறார்கள்.  அவர்களோ, அந்தக் கருங்காலித்தனத்தை செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். முகத்தில் பூசப்பட்ட கரியோடுதான் டொனால்டு டிரம்ப் இந்தியா வருகிறார். உலக நிலவரம் பற்றி யெல்லாம் கவலைப்படாமல், டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்துக்கு எப்படியாவது உதவிட முடியாதா என்று இந்தியப் பிரதமர் முனைப்பு காட்டுகிறார். ”கெம் சோ, டிரம்ப்” என்றொரு முழக்கத்தை வைத்தனர். அதை வட இந்தியாவைச் சேர்ந்த சாதாரண மக்கள் “காம் சோர்”(வேலை செய்யா மல் ஏமாற்றும் திருடன்) என்று சொல்லத் துவங்கி விட்டார்கள். இதனால் அவசரம், அவசரமாக “நமஸ்தே டிரம்ப்” என்று மாற்றி விட்டார்கள். முழக்கத்தை மாற்றினாலும், மக்களை ஏமாற்ற முடியாது என்பதை டிரம்ப்-மோடி ஜோடி விரை வில் புரிந்து கொள்ளும்.

ஆனால், இந்தியா போன்ற நாடுகளைத் தன் வசம் இழுத்துவிட முடியும் என்று டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது. இந்நிலையில்தான் இராக் நாடாளு மன்றத்தின் தீர்மானத்திற்கு ஏற்பட்டுள்ள கதியைக் கவலையுடன் பார்க்க வேண்டியுள்ளது. அமெ ரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று மக்களால் தேர்வு செய்யப்பட்ட இராக் நாடாளு மன்ற உறுப்பினர்கள் சொல்லிவிட்டபோதும், நகர மறுக்கிறார்கள். சுமார் 6 ஆயிரம் அமெரிக்கப் படையினர் இங்குள்ளனர். எந்தெந்த நாடுகளில் அமெரிக்கப் படைகள் உள்ளனவோ, அந்தந்த  நாட்டு நிர்வாகம்தான் அந்தப் படையினருக்கான செலவையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு அந்த நாட்டு மண்ணின் சட்டங்கள் பொருந்தாது. ஜப்பான் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவத்தின ரின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளன. அதற்கெ திரான போராட்டங்களும் வலுவடைந்துள்ளன. ஆனால், அமெரிக்க ராணுவம் இதைப்பற்றி யெல்லாம் கவலைப்படவில்லை.  உலகம் முழுவதும், எந்தெந்த நாடுகள் எல்லாம் அமெரிக்க ராணுவத்தைத் தங்கள் மண்ணில் படைத்தளம் அமைக்க அனுமதித்துள்ளனவோ, அந்த நாடுகள் முழுக்க கவலைப்பட வேண்டியி ருக்கிறது. உலகம் முழுவதும் 150 நாடுகளில், சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம்  அமெரிக்க ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். மிகப்பெரும் ஆபத்தில் இந்த பூமிப்பந்து சிக்கியிருக்கிறது. எந்த நாட்டின் இறையாண்மையையும் அமெரிக்கா மதிக்கப் போவதில்லை. நாடுகளைத் தனது ராணுவ வசம் கொண்டு வருவதற்கும் தயங்க மாட்டார்கள். மீண்டும், இந்த உலகம் இந்த அனுபவத்திலி ருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.