tamilnadu

img

கொரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்; தெற்காசிய நாடுகளும் தப்பாது

உலக வங்கி அறிக்கையில் தகவல்

புதுதில்லி, ஏப்.12 இந்தியாவின் வளர்ச்சி விகிதம் (நாற்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த பொருளாதார சீர்திருத்தத்தைவிட) இந்தாண்டு மோசமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி 'தெற்காசிய பொரு ளாதார பார்வை' அறிக்கையை ஞாயிறன்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டிரு ப்பதாவது:-

2021 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 1.5 - 2.8 சதவீதமாக இருக்கும்.  தெற்காசிய நாடுகள் இந்த ஆண்டு 1.8 சதவீதம் முதல் 2.8 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சியைக் காட்டக்கூடும். இந்தியா மட்டுமல்லாது இலங்கை, நேபாளம், பூடான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளும் பொருளாதார வளர்ச்சியில் கடும் வீழ்ச்சியைக் காணும்.  பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவு ஆகிய மூன்று நாடுகள் மந்தநிலையைச் சந்திக்கும் எனவும்  உலக வங்கி கணித்துள்ளது. கொரோனா வைரஸை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தெற்காசியா முழுவதும் (விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்துள்ளன) கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள் வேலைகளிலிருந்து வெளியேறிவிட்டனர். சிறு-குறு தொழில்கள் நலிவடைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்த இடங்களிலிருந்து சொந்த கிராமங்களுக்கு திரும்பிவிட்டனர் என உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்க அதிகாரி ஹார்ட்விக் ஷாஃபர் கூறுகையில், தெற்காசிய நாடுகளில் ஊரடங்கு நீடிக்கப்பட்டால் பொருளாதார நிலை இன்னும் மோசமாகும். எனவே கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் உடல்நலத்தையும் அவர்களின் பொருளாதார நிலையையும் பாதுகாப்பது அவசியம் எனத்  தெரிவித்துள்ளார்.