tamilnadu

img

‘எங்கப்பன் எட்டாம் நம்பர் குதிருக்குள் இல்லை’

மடியில் கனமில்லையென் றால் வழியில் பயமில்லை என்பது தமிழ்ப் பழமொழி! செய்வது தவறில்லை என்றால், எதை யும் மறைக்கவேண்டிய அவசியம் இல்லை! ஆனால், பிம்கேர்ஸ் பற்றிய தக வல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது என்று பிரதமர் அலுவலகம் மறுத்தி ருக்கிறது. அதற்கு, தகவல் அறியும் உரிமை சட்டம் 2005இன், 2(எச்) பிரிவு காரணமாகக் குறிப்பிடப்பட்டி ருக்கிறது. இந்தப் பிரிவு, அரசமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தாலோ, மாநில சட்டமன்றத்தாலோ, உருவாக் கப்பட்டு, அரசின் நிதிகளைப் பயன் படுத்தும் அமைப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டது என்று குறிப்பிடுகிறது. அந்த விதியைப் பயன்படுத்தி மறுத்ததன்மூலம், பிஎம் கேர்ஸ் என்பது, எவ்விதத்திலும் அரசு க்குத் தொடர்பற்ற நிதி என்று மத்திய அரசு மறைமுகமாகக் கூறியிருக்கிறது.

அரசுக்கு எவ்விதத்திலும் தொடர் பற்ற ஒரு நிதிக்கு, பிஎம் கேர்ஸ் என்ற  பெயரைச் சூட்டியதே ஒட்டுமொத்த இந்திய மக்களையும் ஏமாற்றும் வேலை யல்லவா? அதற்கு பிரதமரே கவுரவத் தலைவர், அறங்காவலர்களாக உள் துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை அமைச்சர்கள் என்பது, ஒட்டு மொத்த அரசுமே மக்களை ஏமாற்றும் நடவ டிக்கையில் ஈடுபட்டிருப்பதாக அல்லவா தோன்றுகிறது? அப்படியான ஓர் ஏமாற்று வேலைக்கு நிதியளிக்கும் படி பிரதமரே வேண்டுகோள் விடுத்தது எப்படி? ஒரு நாட்டின் பிரதமர் செய்கிற செயலா இது? அப்படியான தனியார் நிதிக்கு வரிவிலக்கு எப்படி அளிக்கப் பட்டது? மாநில முதல்வர் நிதிகளுக்கு வழங்கப்படும் நிதி கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி கணக்கில் கொள்ளப்படாது என்று கூறி, கார்ப்பரேட் நிறுவனங்கள் பிம் கேர்சுக்கு மட்டுமே நிதியளிக்க வேண்டும் என்று நெருக்கடி வேறு அளிக்கப்பட்டதே?

அப்படியெல்லாம் திரட்டப்பட்ட நிதி எவ்வளவு, எளிய மக்களுக்காகச் செலவிடப்பட்டதா என்ற எந்தச் செய்தி யையும் இந்திய மக்களுக்குத் தெரி விக்கவேண்டிய அவசியம் இல்லை என்பது, ‘எங்கப்பன் எட்டாம் நம்பர் குதி ருக்குள் இல்லை’ என்ற கதையாக, மறைத்தே ஆகவேண்டிய தவறுகள் இருப்பதாகவே உணர்த்துகின்றன. எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதுதான் பாஜகவின் நடைமுறை என்பதை, கொள்ளை நோயொன்று குடிமக்களின் உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கும் வேளையிலும், எளிய மக்களுக்கு உதவி எதுவும் செய்யா மல், நிதியையும் திரட்டி மறைத்து வைத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கை நிரூபித்திருக்கிறது.