tamilnadu

img

பருவநிலை மாற்றத்தால் மனிதர்களுக்கு கெடுதல்- ஐ.நா சபை

பருவநிலை மாற்றத்தால் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட போவதாக ஐ.நா எச்சரித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை பருவநிலை மாற்றம் தொடர்பான அறிவியல் அறிஞர்கள் ஆய்வுக் குழு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பருவநிலை தொடர்பான ஆய்வுக் குழு வெளியிட்ட அறிகையில், தொடர்ந்து மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் கடல் உணவுகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் வெப்பத்தின் அளவு அதிகரிப்பதால் பல பகுதிகளில் மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் எண்ணிக்கை குறையும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடல் நீரின் ஆக்ஸிஜன் அளவு குறைந்துள்ளது. மேலும் அமிலத்தின் அளவும் அதிகரித்துள்ளது. 

இந்நிலை தொடர்ந்தால் கடல் நீர் மட்டம் அதிகரித்து, சக்திவாய்ந்த புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைச்சீற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர். இந்த பருவ நிலை மாற்றம் மனிதர்களுக்கு கெடுதல்களை விளைவிக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.
 

;