ஈரோடு, செப்.16- அந்தியூர் பகுதியில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சிறு மிகளின் மரணம் தொடர்பாக மாநில சிறப்பு புலனாய்வு விசா ரணை கோரி சிறுமியின் பெற் றோர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சி யரிடம் பெற்றோர்கள் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா மைக்கேல் பாளையம் கழுதப்பாளி பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இவர் களுக்கு ஓவியா (14) என்ற மகளும், அதே பகுதியைச் சேர்ந்த கரியான், வீரம்மாள் தம்பதிக்கு சுகந்தி (16) என்ற மகளும் இருந்தனர். இந்நிலை யில், கடந்த 2019 ஆம் ஆண்டு புத் தாண்டு அன்று கோவிலுக்கு செல்வதாகக் கூறி சென்ற ஓவியா, சுகந்தி ஆகிய இருவரும் வீடு திரும்பவில்லை. இதன்பின் 3.1.2019 ஆம் தேதியன்று ஆப்பக் கூடல் பகுதியில் பவானி ஆற் றில் காவல்துறையினர் பிணமாக இருவரையும் கண்டெடுத்துள் ளனர். இந்நிலையில், ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் சந்தேக மர ணம் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் எவ்வாறு இறந்தனர் என்ற கார ணத்தை இதுவரை கண்டுபிடிக்க வில்லை. மாறாக, இறப்பிற்கு முன் பாக அவர்களை யாரோ கைபேசி யில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் பதிவிட்டுள்ளார். இது பல வாட்ஸ் அப் குழுமங்களில் பகிரப்பட் டுள்ளது. ஆகவே, இது குறித்து தீவிரமாக விசாரித்து இறப்பிற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பவானி காவல் துணை கண்காணிப்பாளரிடம் பல முறை மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆப்பக்கூடல் காவல் நிலைய உதவி ஆய்வா ளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும், தற்போது வரை கண்டு பிடிக்கவில்லை. எனவே தாழ்த்தப்பட்ட அருந்ததிய சமூகத் தைச் சேர்ந்த ஏழை, எளிய கூலித் தொழிலாளி ஆகிய எங்கள் மகள்கள் இறப்பிற்கான காரணத்தை மாநில சிறப்பு புலனாய்வு துறை மூல மாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பலியான சிறுமிக ளின் பெற்றோர் மனு அளித்தனர். இம்மனுவினை அளிக்கையில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செய லாளர் பி.பிபழனிசாமி, ஏ.கே.பழனி சாமி உள்ளிட்டோர் உடனிருந் தனர்.