tamilnadu

img

காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக மாவட்ட ஆட்சியரிடம் மாணவர் சங்கம் மனு

ஈரோடு, ஜூலை 2- காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது. சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்களை யும் கைது செய்வதோடு, அவர்களுக்குக் கடுமையான தண் டனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் அடியாட்களை உரு வாக்காதே என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்திய மானவர் சங்கத்தினர் ஈரோடு மாவட்ட ஆட்சிய ரிடம் மனு அளித்தனர்.  இதில், மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீ.மாரி யப்பன், ஈரோடு மாவட்ட தலைவர் மா.வினிஷா, மாவட்ட செய லாளர் கோ.கோபிகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சுபாஷ், நவீன், திவாகர் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

;