tamilnadu

img

சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது  : அமைச்சர் சொல்கிறார்

ஈரோடு:
ஈரோட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில்இருந்துதான் 90 சதவீத கேள்விகள்  கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கு வோம். சனிக்கிழமைகளில் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும். கொரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும். சிறப்பாசிரியர்களாக சேர்ந்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை. இவ்வாறு அமைச்சர்  தெரிவித்தார். 

;