ஈரோடு, ஜூலை 18- ஈரோடு மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மீதான புகார் பெற தனி பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீதான புகார்களுக்கென மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் ஒரு குறைதீர்க்கும் பிரிவு அமைக் கப்பட்டுள்ளது. அப்பிரிவிற்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தலைவராகவும், இரண்டு வட்டாட்சியர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட் டுள்ளனர். எனவே கிராம நிர்வாக அலுவலர்கள் மீது ஏதேனும் புகார் மனுக்கள் இருப்பின் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிராம நிர்வாக குறைதீர்க்கும் பிரிவு, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) எனும் கிராம நிர்வாக குறைதீர்க்கும் பிரிவில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.