tamilnadu

img

ஆட்சிமொழி வார விழிப்புணர்வு பேரணி

கோபி,மார்ச் 9- கோபிசெட்டிபாளையத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி வார விழிப்புணர்வு பேரணி திங்க ளன்று நடைபெற்றது.  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தில் தமிழ்  வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி வார விழிப்புணர்வு  பேரணி திங்களன்று நடைபெற்றது. இப்பேரணியை கோபி செட்டிபாளையம் உட்கோட்ட காவல் துணைக்கண்கா ணிப்பாளர் தங்கவேல் கொடியசைத்து தொடங்கிவைத் தார். இதில், தமிழ் மொழியில் பெயர்பலகைகளை அமைக்க வேண்டும், தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் பரப்ப வேண்டும் என்று அடிப்படையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது துணைக்கண்கா ணிப்பாளர் அலுவகம் முன்பு தொடங்கி கச்சேரிமேடு பெரி யார்திடல், கடைவீதி, பேருந்துநிலையம், புதுப்பாளையம் வழியாக நாயக்கன்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது.  இப்பேரணியில் அரசு அலுவலகர்கள், கல்லூரி மாண விகள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று விழிப் புணர்வு பதாகைகள் ஏந்திச்சென்றனர்.