tamilnadu

கீழ் பவானி பாசன பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு

ஈரோடு, நவ.18- கீழ் பவானி பாசன பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர்  அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீ ரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருவது பவானி சாகர் அணை. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின் றன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அணையிலிருந்து கீழ் பவானி வாய்க்கால் மற்றும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதி களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது கீழ் பவானி பாசன பகுதி களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை  பெய்து வருகிறது. இதனால் பயிருக்கு பாய்ச்ச வேண்டிய தண்ணீர் தேவை குறைந்துள்ளதால், பவானிசாகர் அணையி லிருந்து திறக்கப்பட்ட 3100 கன அடி  தண்ணீர் 1900 அடியாக குறைக்கப்பட் டுள்ளது.