ஈரோடு, மார்ச் 7- கோபி மேட்டுவலவில் இடிந்து விழும் நிலையில் உள்ள நூலகத்தை பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். கோபிசெட்டிபாளையம் நகராட்சி பூங் காவின் ஒரு பகுதியில் தாலுகா அளவிலான நூலகம் உள்ளது. இதன் கட்டுப்பாடில், கோபியை சுற்றிலும் பல்வேறு இடங்களில் கிளை நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதன் கிளை நூலகங்களில் ஒன்றான கோபி மேட்டுவலவிலும் சுமார் 20 ஆண்டு களுக்கு மேலாக கிளைநூலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண் டுகளுக்கு முன் நூலக கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் வேறு இடத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இந்த நூலக கட்டி டம் இடிக்கப்படாத நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடியும் அபாய நிலை யில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நூலகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டாலும் பழுதடைந்த நூலக கட்டிடம் இதுவரை இடித்து அப்புறப்ப டுத்தப்படவில்லை. மேலும், கட்டிடத்தைச் சுற்றி தற்காலிக தடுப்பு கூட ஏற்படுத்த வில்லை. அருகிலேயே அரசு உதவிபெறும் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 80 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் பழுதடைந்த நூலக கட்டி டம் வழியாக காலை மற்றும் மாலை நேரங் களில் செல்லும் போது அசம்பாவிதம் ஏற்ப டும் முன் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.