கோபி, ஜூன் 8- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.நகரின் பின்பகுதியின் முட்புதரில் இரு மயில்கள் உயிரிழந்து கிடந்ததை வனத்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற் கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டூர் எஸ்.பி.நகர் பகுதியின் முட்புதரில் இரு மயில் கள் உயிரிழந்து கிடைப்பதைப் பார்த்த அப்பகுதி பொது மக்கள் தூக்கநாயக்கன்பாளையம் வனசரக அலுவலகத் திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அலுவலர்கள் உயிரி ழந்து கிடந்த இரு மயில்களையும் கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இதன்பின்னர் மயில்கள் உயிரிழப்பு குறித்து விசா ரணை மேற்கொண்டுள்ளனர். விவசாயத் தோட்டங்களில் விஷம் வைத்ததால் மயில்கள் உயிரிழந்துள்ளதா? அல்லது வேட்டையாடும் நோக்கில் மயில்கள் கொல்லப்பட்டதா? என்பது குறித்து அப்பகுதியில் வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், மயில்களின் உடற் கூறாய்வு செய்த பின்னரே மயில்கள் உயிரிழப்பு குறித்து கார ணம் தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள் ளனர்.