tamilnadu

img

பவானிசாகர் அணையிலிருந்து ஆக.15 முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

ஈரோடு : பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக ஆக.15ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஈரோடு மாவட்டம் , பவானி சாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 15.08.2021 முதல்  12 .12.2021 வரை தண்ணீர் திறந்து விடத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் , இந்த 120 நாட்களுக்கு 23846.40 கண அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளது. 

இதனால்,  ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி , பவானி , பெருந்துறை , மொடக்குறிச்சி , ஈரோடு மற்றும் கொடுமுடி வட்டம் , திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் வட்டம் மற்றும் கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டம் ஆகியவற்றிலுள்ள ஒரு லட்ச ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

;